We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!
We Need Everything "Permanent.." in a "Temporary" Life..!!

Wednesday, November 23, 2022

செம்பு(COPPER)

 செம்பு 

 (COPPER) 










        சுரங்கங்களில்  கிடைக்கின்ற  இந்த  உலோகம்  நாம்  அதிகமாகப்  பயன்படுத்தக்கூடிய உலோகம்.  இது  தங்கம்,  வெள்ளி,  வெண்வங்கம்,  காரீயம்,  நாகம்,  இரும்பு,  நிமிளை,  கெந்தி  முதலிய  பொருட்களுடன்  கலந்து  கிடைக்கிறது.  இக்கலப்பிலிருந்து  செம்பை  தனியாகப்  பிரித்தெடுக்கின்றனர்.

           வட  அமெரிக்காவிலும்,  நேபாளத்திலும்  செம்புத்  தாது  அதிகமாக  கிடைக்கிறது.   இதில்  நேபாளத்தில்  கிடைப்பதுவே  அன்றும்  இன்றும்  சிறந்த  வகை  என்று  (அன்றும் -  இன்றும்)  சொல்லப்படுகிறது.   'இங்கிலீஸ்  முறை,  ஜெர்மன்  முறை'  என  இரு  முறைகளில்  கலப்புத்  தாதுவிலிருந்து  செம்பு  பிரிக்கப்பட்டு  நமக்கு  கிடைக்கிறது.  

            இது  வெடியுப்பு  திராவகத்தில்  மட்டுமே  கரையும்.  இது  கரையும்  போது  சிவந்த  புகை  உண்டாகும்.   கெந்தக  திராவகத்தில் காய்ச்சும்  போது  1090 டிகிரி  வெப்பம்  தேவைப்படும்.

          இந்திரகோபம் (பட்டுப்பூச்சி),  பூநாகப்  பூச்சி (நாங்கூழ் பூச்சி),  மயில்  இறகு,  தலை  மயிர்  மற்றும்  சில  மூலிகைகளிலிருந்தும்  செம்புச்  சத்து  எடுக்கப்படுகிறது.

        சுத்தமாக  தூய்மை  செய்யப்பட்ட  செம்பானது  வெள்ளி,  தங்கம்  முதலியவைகளுடன்  மிதமான  அளவோடு  முறையாக  சேர்க்கப்பட்டால்  அதற்குரிய  குணத்தைப்  பெறுகிறது.

             தாமிரம்,   அவுதும்பம்,   உதும்பம்,   இரவி,   ராசி,   இரவிப்பிரியம்,  எருவை,  சீருணம்,  சீருணி  கற்பம்,  சுலபம்,  தாம்பிரம்,  பரிதி,  விடம்  என்ற  பெயர்களும்  செம்புக்கு  உண்டு.

             வெப்ப   வீரியமுள்ள  இது  கார்ப்புச்  சுவையுடன்  இருக்கும்.  இது  வெப்ப  உடலினர்க்கு  ஆகாது.  வாந்தி  உண்டாக்குவது  இதன்  தீய  குணமாகும்.


" தாம்பரத்தாரற்  சோரிபித்தஞ் சந்நி    வழுவைகபம் 

  வீம்பார்பி  லீகமந்தம்  வெண்மேகந் --- தேம்பழலை

  சூதகநோய்  புண்கிரந்திதோடசுவா  சங்கிருமி

  தாதுநட்டங்  கண்ணோய்போஞ்  சாற்று. "  


          குட்டம்,  பெருநோய்,  பித்தவிகற்பம்,  கபவிகற்பம்,  செந்நீர்ப்பித்தம்,  பெருவயிறு,  குன்மம்,  புண்கள்,  தாது  இழப்பு,  இருமல்,  ஈளை,  இளைப்பு,  கண்நோய்  முதலியவைகளைப்  போக்கும்.

                அயம்,  சூதம்,  தங்கம்,  நாகம்  முதலியன  நட்புச்  சரக்குககள்.

                காரீயமும்,  வெடியுப்பும்  பகைச்  சரக்குகள்.

        இந்த  உலோகத்தில்  வெளுப்பாக  அல்லது  கருப்பாக  உள்ளதும்,   அடித்தால்  விரிந்து  கொடுப்பதும்,   கழுவக்  கழுவக்  கருத்துக்  காணப்படுவதும்  மருத்துவத்திற்கோ  வேதியியலுக்கோ   பயன்படாது.




Share:

இரசவாத இரகசியங்கள் ஏழு

 இரசவாத இரகசியங்கள் ஏழு 



1.குற்றமில்லாத சிவப்பு நிற இரசமும் கெந்தியும் சம அளவில் சேர்ந்தால்                  தங்கம் உண்டாகும்.

2.குற்றமுள்ள இரசமும் கெந்தியும் சம அளவில் சேர்ந்தால் செம்பு  உண்டாகும்.                            

3.குற்றமுள்ள இரசம் சிறு அளவிலும் குற்றமுள்ள கெந்தி பெரு அளவிலும்               சேர  அயமுண்டாகும்.

4.குற்றமுள்ள இரசம் பெரிதும், குற்றமுள்ள கெந்தி சிறிதும்    சேர                                   வெள்ளீயமுண்டாகும்.

5.குற்றமுள்ள இரசம் அதிகமாகவும், அதை விடக் குற்றம் அதிகமுள்ள கெந்தி        குறைவாகவும் சேர காரீயம் உண்டாகும்.

6.குற்றமுள்ள இரசமும், அதைவிட அதிக குற்றமுள்ள கெந்தியும்     சேர                     நாகமுண்டாகும்.

7.சுத்தமான இரசமும் தாளகமும் சம அளவில் சேர வெள்ளி உண்டாகும். 






Share:

SEVEN SECRET of TAMIL ALCHEMY from Tamilnadu

                         SEVEN SECRET  of  ALCHEMY

 IN TAMIL  PEOPLES ALCHEMY 




1. An equal amount of pure red Mercury and pure Sulfur makes Gold.

2. Copper is formed when impure Mercury and impure Sulfur are mixed in equal quantities.

3. Iron is formed when small quantities of impure Mercury and large quantities of impure Sulfur 
    are mixed in equal quantities.

4. Tin Stannum is caused by excessive amounts of contaminated Mercury and small amounts of 
    contaminated Sulfur.

5. Lead is formed when high amounts of contaminated Mercury and low levels of highly 
    contaminated Sulfur are present.

6. Zinc is formed when highly contaminated Sulfur is mixed with impure Mercury.

7. When pure Mercury is mixed in equal quantities and in arsenic Trisulphide, Silver is formed.







Share:

Thursday, December 2, 2021

On earth, metal grows like a plant

பூமியிலேயே ஒரு தாவரத்தை போல வளரும் உலோகம்

பூமியிலேயே உலோகம் ஒரு தாவரத்தை போல வளரும்

Mouse over the image:

Share:

Wednesday, April 14, 2021

Atomic Science of the Tamil People

 

Atomic Science of the Tamil People

(Low Energy Nuclear Reaction)

 

Everything in this world is made up of atoms.

Although God created this world. I see that everything God has created is subject to the laws of scientific reaction.

Scientists say that nuclear fission and nuclear fusion can only be done in existing science by nuclear reactions with high and very high energy.

There is no historical evidence that any scientist who has ever lived and died in the world and is currently alive in the world can say that I can perform nuclear reactions with low and very low energy. But I say as a Tamil who came the way of the Tamil-speaking people, the oldest language in the world. I can do nuclear reactions with very little energy.

Atomic Reaction with Low and Very Low Energy I can do nuclear fission and nuclear fusion using nuclear science.

I say explanation by nuclear science only for the sake of understanding for scientific researchers. But in my view this low and very low energy nuclear reaction is because nuclear science occurs naturally on Earth. An object evolves into another substance and transforms into an alternative substance.

And many natural resources are evolving because nuclear reactions occur naturally on Earth with this very low energy that I know of. Furthermore, I firmly believe that nuclear fusion science can make it possible for the human body to evolve with very little energy without being affected by disease.

God has no religion. The way to receive the immortal body is for the human beings living in the world to follow the true God and do good deeds, realizing that there is only one God for all human beings living in the world. Do not go the wrong way by relying on the wrong politicians and the wrong religious people. Be aware that the end of his life is in his hands. So choose the right path and follow. 

If humans do not understand that nature cannot be defeated by attacking with the world's most powerful weapon, then they are not human. But understanding the science that runs in nature can prevent nature from harming humanity. Nature, which cannot be defeated by the weapons of the superpowers, can only be defeated by knowledge. Also keep in mind that it is not difficult for any person who can conquer nature to conquer the weapon of superpowers.    

I believe that nature can be preserved only if we are fully aware of how nature works by nuclear science that works naturally. Unless we can rearrange the earth we live on and make it suitable for human habitation, it will be impossible for humans to find a new planet to live on and rearrange it. 

It is generally said that alchemy is a pseudo-science on a global scale. The losers in alchemy would have said that alchemy is a fake science. But I would say that one of the sciences in Tamil alchemy is the science of very low energy nuclear reactions. And I believe that there are many more natural sciences in Tamil alchemy.

Scientific researchers will now understand that the science of naturally occurring nuclear reactions is a science found in Tamil alchemy. Only those who know other languages ​​will know if there is science in alchemy in languages ​​other than Tamil.

I say today that my mother tongue is not only the oldest language but also the science of conserving nature is in my mother tongue. Further excavations underground may have concealed the scientific evidence of the Tamils ​​found. But no one can hide the science of Tamils ​​from the people of the world anymore. 

Tamils do not want to rule the world by enslaving the people of the world but on the contrary Tamils are the ones who have the idea of making the people of the world living happily ever after without disease.

 

14-04-2021

Amal

 

Share:

தமிழ் மக்களின் அணு அறிவியல்

 

தமிழ் மக்களின் அணு அறிவியல்

(குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல்)


இந்த உலகில் உள்ள அனைத்துமே அணுக்களால் உருவானதுதான். 

கடவுள் இந்த உலகை படைத்திருந்தாலும். கடவுள் படைத்த அனைத்திலுமே  அறிவியல் வினைபுரிதல் விதிமுறைகளுக்கு உட்பட்டே உருவாக்கி இருப்பதை நான் பார்க்கிறேன்.

உயர் மற்றும் மிக உயர்ந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல் மூலம் மட்டுமே தற்போதுள்ள அறிவியலில் அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவும் செய்ய முடியும் என்கின்றர் விஞ்ஞானிகள்.

உலகத்தில் இதுவரை வாழ்ந்து மறைந்த மற்றும் தற்போது உலகில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த ஒரு விஞ்ஞானியும் என்னால் குறைந்த மற்றும் மிக குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதலை செய்ய முடியும் என்று சொல்லிய ஒரு வரலாற்று ஆதாரங்களும் இல்லை. ஆனால் உலகின் மிக பழமையான மொழியான தமிழ் மொழி பேசும் மக்களின் வழி வந்த ஒரு தமிழனாக நான் சொல்கிறேன். மிகவும் குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதலை செய்ய என்னால் முடியும்.    

குறைந்த மற்றும் மிக குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல் அணு அறிவியலை பயன்படுத்தி அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவும் என்னால் செய்ய முடியும். 

அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக மட்டுமே அணு அறிவியலால் விளக்கம் சொல்கிறேன். ஆனால் என் பார்வையில் இந்த குறைந்த மற்றும் மிக குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல் அணு அறிவியல் பூமியில் இயற்கையாக நிகழ்வதால்தான். ஒரு பொருள் வேறு பொருளாக பரிணாம வளச்சியடைந்து மாற்று பொருளாக மாற்றம் பெறுகிறது.

மேலும் அணுக்கரு வினைபுரிதல்  பூமியில் இயற்கையாக நிகழ்வதால் பல இயற்கை வளங்கள் பரிணாம வளர்ச்சி பெறுகின்றன. அதுமட்டுமல்ல  நோய்களால் பாதிக்கப்படாமல் மனித உடலை பரிணாம வளர்சியடைய செய்ய மிகவும் குறைவான ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல் அறிவியல் மூலம் சாத்தியப்படுத்த முடியுமென நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன்.

கடவுளுக்கு மதம் இல்லை. உலகில் வாழும் மனிதகுலம் அனைவருக்கும் ஒரே ஒரு கடவுள் மட்டும்தான் என்பதை உணர்ந்து உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் உண்மையான கடவுளை பின்பற்றி நற்செயல் செய்வதே அழியா உடலை பெறும் வழியாகும்.  தவறான அரசியல் வாதிகளையும், தவறான மதவாதிகளையும் நம்பி  நீங்களும் தவறான வழியில்  போகாதீர்கள். விழிப்பாய் இருங்கள் அவரவர் வாழ்வின் முடிவு அவரவர் கையில்.  அதனால் சரியான பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள்.  

உலகின் அதிநவீன சக்திவாய்ந்த ஆயுதம்கொண்டு தாக்கினாலும் இயற்கையை வெல்ல முடியாது என்பது மனிதர்களுக்கு புரியும் அப்படி புரியவில்லையென்றால் அவர்கள் மனிதர்களே இல்லை என்பேன். ஆனால் இயற்கையில் இயங்கும் அறிவியலை புரிந்து கொண்டால் இயற்கையை மனிதகுலத்திற்கு தீங்கு விளைவித்து விடாமல் தடுக்க முடியும். வல்லரசுகளின் ஆயுதங்களால் வெல்ல முடியாத இயற்கையை அறிவால் மட்டுமே வெல்ல முடியும். இயற்கையை வெல்ல முடிந்த எந்த ஒரு நபராலும் வல்லரசுகளின் ஆயுதத்தை வெல்வது கடினமல்ல என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.   

இயற்கையாக இயங்கிக் கொண்டிருக்கும் அணு அறிவியலால் இயற்கை இயங்குவதை நாம் முழுமையாக அறிந்தால் மட்டுமே இயற்கையை பாதுகாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நாம் வாழும் பூமியை நம்மால் மறுசீரமைத்து மனிதன் வாழ ஏற்ற பூமியாக மாற்ற முடியாவிட்டால்  மனிதர்கள் வாழ ஏற்ற கிரகமாக ஒரு புதிதாக கிரகத்தை  தேடி கண்டறிந்து சீரமைத்து வாழ்வதும் சாத்தியமற்றதே.

பொதுவாக உலக அளவில் ரசவாதம் என்றாலே போலி அறிவியல் என்று சொல்கின்றனர்.  ரசவாதம் என்பது போலி அறிவியல் என்று ரசவாதத்தில் தோற்றவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால்  தமிழர்களின் ரசவாதத்தில் உள்ள ஒரு அறிவியல் மிகவும் குறைந்த ஆற்றல் அணுக்கரு வினைபுரிதல் அறிவியல் என்று நான் சொல்கிறேன்.  மேலும் தமிழ் ரசவாதத்தில் இன்னும் பல இயற்கை சார்ந்த அறிவியல் உள்ளதாகவே நான்  நம்புகிறேன்.      

இயற்கையாக நிகழும் அணுக்கரு வினைபுரிதல் அறிவியல் தமிழ் ரசவாதத்தில் இருக்கும் ஒரு அறிவியல் என்பதை இப்போது புரிந்து கொள்வார்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். தமிழ் மொழி தவிர உலகில் உள்ள மொழிகளில் வேற்று மொழிகளில் உள்ள ரசவாதத்தில் அறிவியல் இருக்கிறதா என்பதை வேற்று மொழிகள் தெரிந்தவர்கள் சொன்னால் மட்டும்தான் தெரியும். 

நான் இன்று சொல்கிறேன் என் தாய்மொழி மிக பழமையான மொழி மட்டுமல்ல இயற்கையை பாதுகாக்கும் அறிவியலும் என் தாய் மொழியில் உள்ளது.  பூமிக்கு அடியில்  அகழாய்வு மேற்கொண்டு கிடைத்த தமிழர்களின் அறிவியல் ஆதாரங்களை மறைத்து தடுத்திருக்கலாம். ஆனால்  இனி தமிழர்களின் அறிவியலை  உலக மக்களுக்கு தெரியமல் எந்த ஒரு நபராலும் மறைக்க முடியாது.   

உலகின் நிலப்பரப்பில் வாழும் மக்களை அடிமைபடுத்தி ஆட்சி நடத்த தமிழர்கள் நினைப்பதில்லை  ஆனால் அதற்கு மாறாக உலக நிலப்பரப்பில் வாழும் மனிதகுலத்தை நோயின்றி நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாக வாழ வைக்கும் சிந்தனை உள்ளவர்கள் தமிழர்கள்.

 

14-04-2021

அமல்

Share:

Monday, August 19, 2019

Aquarium


 Aquarium 




  








Share:

Monday, February 4, 2019

தங்கச்சிமடம் புனித சந்தியாகப்பர் ஆலயம் (St.James Church Thangachimadam)


தங்கச்சிமடம் புனித சந்தியாகப்பர் ஆலயம்         (St.James Church Thangachimadam)



















Share:

Monday, December 24, 2018

CHRISTMAS GREETINGS

CHRISTMAS GREETINGS








Share:

Friday, November 30, 2018

எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழத்தை   மாந்திரீகத்திற்கு   ஏன்   பயன்படுத்துகின்றனர் என்று தெரியுமா?





இன்றைய காலகட்டத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட எலுமிச்சம் பழ வகைகள் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் நமக்கு தெரிந்ததும் நாம் பயன்படுத்துவதும் இரண்டு வகைகள்தான். ஒன்று நாட்டு எலுமிச்சம் பழம் மற்றொன்று கொடி எலுமிச்சம் பழம்.
எலுமிச்சம் பழத்தை சர்பத் போட்டு குடிப்பதும் ஊறுகாய் போடவும் பல வகைகளில்  உணவாக பயன்படுத்துவதையும் நாம் அறிந்ததே மேலும் வைத்தியத்திற்கு பயன்படுத்துவதையும் நாம் அனைவரும்  நன்கு அறிந்த விசயம்தான்.

அடுத்து சுப காரியங்களுக்கு பயன்படுத்துவதில் எலுமிச்சம் பழத்திற்கே முதலிடம் எலுமிச்சம் பழத்தை திருஸ்டி களிக்கவும் மற்றும் மந்திர தந்திர வேலைகளுக்கும்  பயன்படுத்துவதையும் நாம் அனைவரும் அறிந்ததே ஆனால்  எலுமிச்சம் பழத்தை மட்டும் ஏன் பயன்படுத்துகின்றனர்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும். உலோகங்களுக்கு மட்டும்தான் மந்திரங்களை உள்வாங்கும் சக்தி உண்டு அதுவும் குறிப்பாக தங்கம் வெள்ளி செம்பு இந்த மூன்று உலோகங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இன்னம் கொஞ்சம் விபரமாகவே சொல்கிறேன்.  யந்திரம் மற்றும் தாயத்து பற்றி நீங்கள் அறிந்ததுதான். இவை இரண்டையும் உலோக தகடுகளில் மந்திரங்களை உரு ஏற்றி செய்கின்றனர். தங்க தகட்டில் மந்திரங்களை உரு ஏற்றினால் நீண்ட காலம் பயன்படுத்த முடியும் என்றும் வெள்ளி தகட்டில் மந்திரங்களை உரு ஏற்றினால் தங்கத்தைவிட குறைவான காலமும்.  செம்பு தகட்டில் மந்திரங்களை உரு ஏற்றினால்  தங்கம் மற்றும் வெள்ளியைவிட குறைவான காலம்தான் மந்திரங்கள் பயன்தருமாம். உலோகத்திற்கும் மந்திரத்திற்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும்.

எலுமிச்சம்பழத்தில் செம்பு சத்து அதிகமாக இருக்கும் காரணத்தினால்தான் மந்திர தந்திர வேலைகளுக்கு எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துகின்றனர். என்பது இப்போது புரிந்திருக்கும்.





Share:
< நீலம், பச்சை, சிகப்பு > இந்த மூன்று வண்ணங்களில் ரசவாத ரகசியம் உண்டு

Pageviews

Categories